தனக்கு வீரியம் இல்லாத காரணத்தால் மனைவியை தம்பிகளுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக்கொள்ளுமாறு கணவன் கட்டாயப்படுத்திய சம்பவம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.
என் கணவனுக்கு ஆண்மை இல்லை..! அதனால் அவரது சகோதரர்களுடன்..! மனைவி வெளியிட்ட பகீர் தகவல்! அதிர்ந்த உறவுகள்!
தம்பிகள் பாலியல் வன்கொடுமை செய்ததில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஜெய்ப்பூரில் பெண் ஒருவர் பல ஆண்டுகளாக வீட்டில் அடைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு ஆயாள சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்து தப்பி வந்த அந்தப் பெண் ஜெய்ப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் 15 வருடத்திற்கு முன்னனர் திருமணம் ஆனபோது தன்னுடைய கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பது தெரியவந்தது. ஆனால் அது சீக்கிரம் சரியாகிவிடும் என என்னை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவரால் முழு திருப்தியுடன் தன்னுடன் உடலுறவு கொள்ளமுடியாத காரணத்தால் இது வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று பயந்தார்.
இதனால் வீட்டிலேயே அடைத்து வைத்து தனது சகோதரர்களை தன்னுடன் பாலியல் உறவு ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார். அதன் மூலம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அவரது சகோதரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் .
இது குறித்து கணவரிடம் எடுத்துக் கூறினாலும் அவர் இவற்றை கண்டு கொள்வதே இல்லை . மேலும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் கொலை மிரட்டல் விடுத்து அடைத்து வைத்திருந்தனர். எனவே தன் கணவன் மீதும், அவரது சகோதரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.