மோடிக்கு எதிராக ஏன் நிற்கிறார்கள் 125 இயக்குனர்கள்? இதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்று சொல்லலாம். ஏனென்றால் இந்தியா முழுவதுமுள்ள முற்போக்கு திரைப்பட இயக்குனர்கள் 125 பேர் கூட்டாக கையெழுத்துப் போட்டு மோடிக்கு கையெழுத்து போடக்கூடாது என்கிறார்கள். ஏன் என்று அவர்கள் கொடுத்திருக்கும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.


நமது நாடு தற்போது சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. கலாசாரரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் நாம் பிரிந்திருந்தாலும், ஒரு நாடாக நாம் இணைந்து இருக்கிறோம். அதுவே இந்த நாட்டின் குடிமகன்களான நமக்கு நல்ல உணர்வைத் தருகிறது.

ஆனால், தற்போது அவையெல்லாம் வெறும் வார்த்தையாகத்தான் இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாம் சரியாக செயல்படாமல் போனால், பாசிசம் நம்மை கடுமையாகத் தாக்கும். மதரீதியாக நாடு செல்வது என்பது நாம் கேட்டிராத இந்தியா. பா.ஜ.க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்கள் கும்பல் மற்றும் மாட்டு அரசியல் மூலமாகவும் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். இவர்களின் ஆட்டத்தில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஓரங்கப்பட்டுகிறார்கள். இணையதளம் மற்றும் சமூகவலைதளம் மூலம் தங்களின் வெறுப்பு அரசியலை அவர்கள் பரப்புகிறார்கள்.

தேசபக்தி என்பதுதான் அவர்களின் துருப்புச் சீட்டு. யாராவது அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அவர்களை தேசத் துரோகிகள் என்பார்கள். தேசபக்தி என்ற ஒன்றைச் சொல்லி, அவர்கள் வாக்குவங்கியை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் அதிருப்தியால், நாம் சில எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும், ஊடகவியலாளர்களையும் இழந்திருக்கிறோம். அதனை நாம் மறந்துவிடக் கூடாது.

ராணுவத்தைப் பயன்படுத்துவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்று. தேவையில்லாத போர்மூலம் நாட்டை ஆபத்தில் வைப்பார்கள். தேசிய நிறுவனங்களில், அந்த நிறுவனத்துக்குத் தொடர்பில்லாத நபர்களைத் தலைமையிடத்தில் அமரவைத்து, உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கும்படி செய்கிறார்கள். திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் சென்சார் போன்ற நடவடிக்கைகள்மூலம் மக்களுக்கு உண்மை தெரியாதபடி பார்த்துக்கொள்கிறார்கள்.

விவசாயிகளை மறந்தே விட்டார்கள். பா.ஜ.க, இந்தியாவின் வளங்களை, சொத்துகளைத் தொழிலதிபர்களுக்கு வசதியாக வழங்கியுள்ளது. இவர்களின் மோசமான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட பெரும் பேரழிவுகளை, மூடிமறைத்து, வெற்றிபெற்றதுபோல ஜோடிக்கிறார்கள். பொய்யான பரப்புரைகள் மூலம், இதனை அவர்கள் சாத்தியமாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள், நாட்டில் பொய்யான அல்லது தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

வரலாறு மற்றும் புள்ளியியல்களை அவர்களுக்குத் தேவையானதுபோல மாற்றுவார்கள். இன்னும் ஒருமுறை அவர்களுக்கு அதிகாரம் வழங்கினால், அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைத்து அடிக்கும் கடைசி ஆணியாக அது இருக்கும்.

இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வராமல் இருக்க, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்'' என்று கேட்டுக்கொள்கிறோம். இந்திய அரசியலமைப்பின்படி, உங்களின் அரசாங்கத்தைத் தேர்வுசெய்யுங்கள். அந்த அரசாங்கம், நமது பேச்சுரிமையை கருத்துரிமையை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆம்... இதுவே உங்களின் கடைசி வாய்ப்பு.