சிசேரியன் செய்துகொள்வது உயிர் காக்கும் சிகிச்சை என்றாலும் சின்னச்சின்ன பிரச்னைகள் இருக்கவே செய்யும் என்பதை பார்த்தோம். இந்த பிரச்னைகளை எப்படி சரிசெய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் வகையில் நிறைய நிறைய புரோபயோடிக் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்களிலும் கவனம் செலுத்தி வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள உணவு சாப்பிட வேண்டும்.
மருத்துவர் ஆலோசனையுடன் நிச்சயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும், அதேநேரம் ஜிம்மில் கடுமையான பயிற்சிகள் எடுக்கக்கூடாது. தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது என்பதால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
கீறல் போட்ட இடத்தில் புண் அல்லது ரத்தக்கசிவு தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிசேரியன் செய்துகொண்டவர்கள் இரண்டு மாத காலம் ஓய்வு எடுப்பது சிறந்த பலனளிக்கக்கூடியது.