ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டுங்கள்! ஹாஸ்டல் மாணவிகளுக்கு வார்டனால் நேர்ந்த விபரீதம்!

500 மாணவிகளை, டிரெஸ் கழட்ட சொல்லி, ஹாஸ்டல் வார்டன்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஹாஸ்டலில் 500 மாணவிகள் தங்கியுள்ளனர். இதில், யாரோ ஒரு மாணவி பயன்படுத்திய நாப்கின்னை டாய்லெட்டில் போட்டுவிட்டாராம். இதையடுத்து, டாய்லெட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பேரில், அங்கு வார்டன்களாக பணிபுரியும் 4 பேர், மாணவிகள் அனைவரையும் அழைத்து ஒன்றாக நிற்கச் செய்துள்ளனர்.  நாப்கின்னை டாய்லெட்டில் போட்டது யார் எனக் கேட்டு, அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்த தவறை செய்ததற்காக, மாணவிகள் அனைவரையும் டிரெஸ்ஸை கழட்ட சொல்லியுள்ளனர். வேறு வழியின்றி, ஒவ்வொரு மாணவியாக, உடைகளை கழட்ட நேரிட்டுள்ளது. இச்சம்பவம் வெளியே தெரியவந்ததும், மற்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். முதலில் இது சாதாரண சம்பவம்  என மறுப்பு தெரிவித்த குறிப்பிட்ட யுனிவர்சிட்டி நிர்வாகம், தற்போது, அந்த 4 வார்டன்களையும் பணிநீக்கம் செய்து, அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.