செந்திலை வளைக்க முயற்சிக்கும் பிரியங்கா! தடுக்க நினைக்கும் ராஜலெட்சுமி! முகம் சுழிக்க வைத்த விஜய் டிவி!

சென்னை: டிவி தொகுப்பாளினி பிரியங்கா, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


ஆம். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை முதன்மை தொகுப்பாளராக தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக, மூக்குத்தி முருகன் மற்றும் செந்தில் ஆகிய போட்டியாளர்கள் மீது பிரியங்கா ஆசைப்படுவது போல நடித்து வருகிறார்.

பிரியங்கா ஏற்கனவே திருமணமானவர் ஆவார். அத்துடன், பிரியங்காவை தனது கணவர் செந்திலுடன் நெருங்க விடாமல், அவரது மனைவி ராஜலட்சுமி மெனக்கெடுவதுபோலவும்  காட்சிகள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வருகின்றன.

இந்த முக்கோண காதலை நடுவர்கள் பார்த்து சிரிப்பது போலவும் நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் இடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. ஒரு பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் இத்தகைய விஷமத்தனமான கருத்துகளை புகுத்துவது ஆபத்தாக உள்ளதென்றும், இப்படி செய்வதை  நிறுத்திவிட்டு ஒழுங்கான வழியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள்
பிரியங்காவுக்கு அறிவுறுத்துகின்றனர்.