தன் காலை தானே வெட்டிக் கொண்ட விவசாயி! பதற வைக்கும் சம்பவம்! அசர வைக்கும் காரணம்!

அமெரிகாவில் தானியக் கிடங்கு எந்திரத்தில் சிக்கிக் கொண்ட விவசாயி ஒருவர் தனது காலைத் துண்டித்து உயிர் தப்பியுள்ளார்.


வடகிழக்கு நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவர்  63 வயது கர்ட் கசேர். தனது விவசாய நிலத்துக்கு அருகே தானியக் கிடங்கு ஒன்றை அமைத்துள்ளார். இந்தக் கிடங்கில் ஒரு ராட்சத  கலனில் இருந்து கன்வேயர் பெல்ட் இயந்திரம் மூலம்  மற்றொரு கலனுக்கு தானியங்களை மாற்றும் பணியை கசேர் மேற்கொண்டிருந்தார். 

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இயந்திரத்தின் வளைந்த பிளேடுகளுக்குள், அவரது இடது கால் சிக்கிக் கொண்டது. அப்போது அருகில் யாரும் இல்லாத நிலையில் இயந்திரத்தை நிறுத்த முடியாமல் வலியில் துடித்த கசேர் உதவி கேட்க செல்ஃபோனை தேடிய போது அதுவும் அந்த நேரத்தில் அவரிடம் இல்லாமல் போனது. 

அதன் பிறகு அவர் எடுத்த முடிவுதான் யாரும் எதிர்பாராதது. அந்த நேரத்தில் தன்னிடம் இருந்த ஒரே ஆயுதமான சிறு கத்தியைப் பயன்படுத்தி தனது காலைத் துண்டித்து இயந்திரத்தின் பிடியில் இருந்து கசேர் விடுபட்டார். அதன் பிறகே விபரீதத்தை அறிந்து அங்கு வந்த கசேரின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர்.