இந்தியாவில் ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து பாட்டு பாடி வருமானம் ஈட்டி வந்த பெண் தற்பொழுது உலக அளவில் பிரபலமாகியது இந்திய மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்! ஒரே நாளில் யாரும் நினைத்துப் பார்க்காத உயரம்! காரணம் இதுதான்!
சென்ற வருடம் ராணு மொன்டால் என்ற பெண் வட இந்திய ரயில் நிலையம் ஒன்றில் லதா மங்கேஷ்கரின் பாடலை படத்தில் உள்ளவாறே திறமையாக பாடி அசத்தினார். இதில் வியப்படைந்த சகபயணிகள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர்.
பின் அந்த வீடியோவை கண்ட லதா மங்கேஷ்கர் அவர் இசையமைத்த படத்தில் அவருக்கு பாடுவதற்காக வாய்ப்பளித்தார். அதை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு பாடிய அப்பெண்ணுக்கு இந்தியாவில் பல மொழிகளில் பல படங்களில் பாட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது.
அதன்படி மேலும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களிலும் சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு சிறப்பிக்க படுவதும் உண்டு. அந்த வகையில் கடந்த மாதம் மலையாள பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார். இதனை மலையாள பிரபல பாடகி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
அதில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருவருமே அவரை மதிக்காத நிலையில் தற்போது அவரை உலகமே திரும்பிப் பார்த்து இருக்கிறது. இது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றி திறமை உள்ளவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வெற்றி பெறுவார்கள் என்று நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.