தொழில் அதிபர் ரீட்டா தலையில் காயம்! பிரேதப்பரிசோதனை அறிக்கையில் திடுக் தகவல்!

சென்னை: தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் டொயோட்டா கார் ஷோரூம் அதிபர் ரீட்டாவின் தலையில் காயம் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவை சேர்ந்தவர் ரீட்டா ஜானகி லங்காலிங்கம். லான்சன் டொயோட்டா கார் ஷோரூம்   நிறுவனத்தை இவரும், இவரது கணவரும் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி ரீட்டா, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், போலீசார் தெரிவித்தனர். மேலும், கார் விற்பனை குறைந்த காரணத்தால் ரீட்டா தற்கொலை செய்துகொண்டதாகவும் இதனால் நிறுவன ஊழியர்கள் மற்றும் கணவரும் நிறுவன தலைவரான லிங்காவுடன் ஏற்பட்ட தகராறும் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டன.  

இந்நிலையில், இதுபற்றி போலீசார் விரிவான விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் பற்றி அதிருப்தி கூறிவந்த ரீட்டா, அவரை பணிநீக்கம் செய்யும்படி தனது கணவர் லங்காலிங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் மறுக்கவே, இருவருக்கும் இதனால் கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இதன்பேரில், சம்பவத்தன்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, லங்கா லிங்கம் வீட்டில் இருந்து வெளியேறி, கோல்ஃப் விளையாட சென்றுவிட்டாராம். அந்த நேரத்தில் ரீட்டா, தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.  தூக்குப் போட பயன்படுத்திய துணி கிழிந்துவிட்டதால், ரீட்டா கீழே விழுந்துள்ளார். அதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக, தற்போது தெரியவந்துள்ளது.