பிரசவ வலியின் நான்காவது நிலை இதுதான்!!

வலியின் உச்சகட்டத்தில் குழந்தை பிறப்பு நிகழ்கிறது. இதனைத்தான் பிரசவ வலியின் நான்காவது நிலை என்கிறோம். இந்த ஒரு தருணத்திற்காகத்தான் பெண்ணும் அவளை சுற்றிய குடும்பமும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.


·   இப்போது வலி ஏற்படும்போது நீண்ட மூச்சு விடும்படியும், நன்றாக அழுத்தம் கொடுத்து முக்கவும் கர்ப்பிணி கேட்டுக்கொள்ளப்படுவார்..

·   இப்போது மருத்துவர் அருகே இருந்து கர்ப்பிணியை ஆய்வு செய்வார். கைகளால் அழுத்தம் கொடுத்தும் முக்குவதற்கும் ஊக்கம் கொடுப்பார்.

·   வலியின் தீவிரத்தில் முக்குவதும் இழுத்து மூச்சு விடுவதும் சிரமமாக இருக்கும் என்றாலும், குழந்தையை வேகமாக பெற்றெடுப்பது கர்ப்பிணியின் கையில்தான் இருக்கிறது என்பதால் அழுத்தம் கொடுத்து முக்கவேண்டும்.

·   இப்போது குழந்தையின் தலை வெளியே தென்படும். உடனே மருத்துவர் குழந்தையின் தலையை பிடித்து வெளியே இழுத்து பிரசவத்தை முடித்து வைப்பார்

பொதுவாக குழந்தையின் தலை எலும்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால், பிறப்புறுப்பு வழியே வழுக்கிக்கொண்டு வெளிவர முடிகிறது. குழந்தையின் தலை வெளியே வருவதில் தாமதம் அல்லது சிரமம் தென்பட்டால், பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் எபிசியோட்டமி எனப்படும் சிறிய அளவுக்கு கிழிசல் போடப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும். இதுவே நார்மல் டெலிவரி அல்லது இயற்கை பிரசவம் என அழைக்கப்படுகிறது.