திருமணமானது முதலே சாப்பாட்டை குறைத்த இளம் மனைவி..! உடல் மெலிந்து ஒல்லியான பரிதாபம்! ஆனால் அதன் பிறகு அவர் எடுத்த பகீர் முடிவு!

சரியாக சாப்பிடுவதில்லை என திட்டியதால் மனமுடைந்த புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த கீழக்கரையில் 12ம் வகுப்பு வரை படித்துள்ள சிவரஞ்சனி என்பவர் செந்தில்குமார் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். செந்தில்குமாருக்கு மீன்வியாபாரம் செய்து வருகிறார். சிவரஞ்சனி உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் ஒழுங்காக சாப்பிடுமாறு மாமியார் வீட்டில் கூறியுள்ளனர்.

ஆனாலும் குறைந்த அளவே சிவரஞ்சனி உணவு உட்கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து சிவரஞ்சனியின் மாமியார் சம்பந்தியான கோவிந்தராஜிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவுகள் சந்தித்துக்கொண்ட நிகழ்ச்சியில் அனைவரும் சேர்ந்து சிவரஞ்சனியை வசைபாடியுள்ளனர். முறையாக சாப்பிடவேண்டும். இப்படி இருந்தால் எதிர்காலத்தில் குழந்தையை பாதிக்கும் என்றெல்லாம் கொஞ்சம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் மன உளைச்சலுக்கு ஆளான சிவரஞ்சனி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி இறந்தார்.

இதுதொடர்பாக இவரது தந்தை கோவிந்தராஜ் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, மதிப்பெண் குறைவாக பெற்றால் தற்கொலை என எல்லாவற்றிற்குமே தற்கொலை ஒன்றுதான் தீர்வு என பெண்கள் முடிவு எடுக்கும் காலத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?