கருணாநிதிக்கு கோயில்..! இதுதான் பகுத்தறிவா? தடுத்து நிறுத்துங்கள் ஸ்டாலின்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அருந்ததியர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்காலத்தில் அருந்ததியினர் இன மக்களுக்கு 3% இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு கோவில் கட்ட வேண்டும் என ராசிபுரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமமான குச்சிக்காடு பகுதியில் உள்ள மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவில் கட்டும் பணிக்கு அதே ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு பண உதவி மற்றும் பொருளுதவி செய்துவருகின்றனர். இதையடுத்து சுமார் 30 லட்சம் மதிப்பீட்டிலான ஒரு கோவிலை கருணாநிதிக்காக அந்த ஊர் மக்கள் கட்ட வேண்டுமென்றால் தற்போது பூமி பூஜை நடத்தியுள்ளனர். மிக விரைவில் கோவில் கட்டி முடிக்கப்படும் என அந்த ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.