ரயில் நிலையத்தில் தனிமை! கதற கதற இளம் பெண்ணுடன் வல்லுறவு! 2 போலீசாரின் வெறிச் செயல்!

சண்டிகார்: டீன் ஏஜ் சிறுமியை ரயில் நிலையத்தில் வைத்து கதற கதற பலாத்காரம் செய்த ரயில்வே போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பஞ்சாப் மாநிலம், சோலாங் ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அங்கு, ரயில்வே போலீசாராக பணிபுரியும் தில்பாக் சிங் மற்றும் தாரம்பால் ஆகியோர் ரயிலுக்காகக் காத்திருந்த 16 வயது சிறுமி ஒருவரை சுற்றி வளைத்து, விசாரித்துள்ளனர்.

பிறகு, சந்தேகத்தின் பேரில் ஒரு அறைக்கு, அந்த சிறுமியை அழைத்துச் சென்ற அவர்கள், அங்கு வைத்து கதற கதற பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பேரில், பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் அளித்த புகாரை ஏற்று, அந்த 2 பேரையும் சஸ்பெண்ட் செய்த ரயில்வே போலீசார், அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரயில்வே போலீசாரே பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.