தமிழா மீசய முறுக்கு! வெளியானது ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவு!

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுசெய்து, கண்டெடுக்கப் பெற்ற பொருள்களில் இரண்டு, அமெரிக்க நாட்டில் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு, கரிம ஆய்வின் மூலம் (CARBON -14. TEST) அகவை (AGE) கண்டுபிடிக்கும் நோக்கத்திற்காக அனுப்பி வைக்கப் பெற்றிருந்தன. ஆய்வு முடிவுகளை மைய அரசின் தொல்லியல் துறையினர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று ஒப்படைத்தனர்.


ஆய்வு முடிவின்படி, ஒரு பொருளின் அகவை  கி.மு.905 என்றும், மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது முறையே கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு ஆகும்.

இதுபற்றி நீதியரசர் குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே மிகப் பழமையான மொழி “தமிழ்” தான் என்பது உறுதியாகிறது என்று பெருமிதத்துடன் சொல்லியுள்ளார்.

தமிழர்களே ! மிகப் பழமையான மொழிக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கும் நாம் இனிமேலாவது நம் தாய்மொழி மீது அக்கறை கொள்வோம் ! தமிழிலேயே பேசுவோம் ! தமிழிலேயே எழுதுவோம் ! தமிழிலேயே சிந்திப்போம் ! குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டுவோம் !!

[பின் குறிப்பு:- அகழ்ந்தெடுக்கப் பெற்ற ஒரு பொருள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கண்டு பிடிக்க அறிவியல் வல்லுநர்கள் கரிம ஆய்வு முறையைக் கையாளுகின்றனர். அந்தப் பொருளில் இருக்கும் கரிமம்- 14, (CARBON -14) துகளின் அடிப்படையில் அதன் அகவையைக் (AGE) கணிக்கின்றனர். அமெரிக்க நாட்டில் தான் இதற்கான ஆய்வகம் உள்ளது ]