தமிழ்நாட்டின் புதிய சின்னமானது தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சின்னமானது தமிழ் மறவன் பட்டாம்பூச்சி! ஏன் தெரியுமா?

தமிழ்நாடு அரசு சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன.
தற்போது தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) தமிழ்நாடு சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
அந்தப் பரிந்துரையை பரிசீலனை செய்து தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.