தேர்தலில் யார் வெற்றிபெற்றால் என்னவென்று நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது.
தமிழச்சி, கனிமொழி, தமிழிசை, ஜோதிமணி, சாருபாலா! ஐந்து பெண்களில் ஜெயிக்கப்போவது யாரு? துல்லியமான சர்வே ரிப்போர்ட்

நமது நிருபர்களை களம் இறக்கி முக்கியமான சில தொகுதிகளை மட்டும் நோட்டமிடச் சொன்னோம். முக்கியமான தொகுதிகள் என்றதும் பிரச்னைக்குரிய தொகுதிகள் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்கள் போட்டியிடுவதுதான் முக்கியமான தொகுதிகள். இந்தத் தொகுதிகளில் அவர்களுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு என்று சுற்றி வந்தோம்.
அழகான தமிழச்சிக்கு ஆபத்து: தமிழச்சி தங்கப்பாண்டியன் முதன்முதலாக தென்சென்னை தொகுதியி மூலம் தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று மேக்கப் போட்டுக்கொண்டு ஊர் ஊராக சுற்றி வருகிறார். அ.தி.மு.க. சார்பில் எதிர்அணியில் போட்டியிடும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் அமைதியாக இருக்கிறார். என்னவென்று விசாரித்தால், கடைசி நேரத்தில் காசைக் குடுத்து கதையை முடிச்சுக்கலாம் என்கிறார். அதனால் அழகான தமிழச்சிக்கு ஆபத்துதான்.