7 மாதம் கர்ப்பமாக இருந்த 8ம் வகுப்பு மாணவி! காரணம் யார் என தெரிந்து அதிர்ந்த பெற்றோர்!

வேலூர்: 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஸ்வீட் கடை மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.


குடியாத்தம் பகுதியை சேர்ந்த விமலா என்ற சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவரை, அதே பகுதியை சேர்ந்த, ஸ்வீட் கடை மாஸ்டர் இலியாஸ் (45), பலாத்காரம் செய்திருக்கிறார். சிறுமியின் உறவினரான இலியாஸ்க்கு, ஏற்கனவே திருமணமாகி, 5 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், அடிக்கடி ஸ்வீட் கொடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்வதை இலியாஸ் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். நேற்று முன்தினம் மாணவி வயிறு வலிப்பதாகக் கூறவே, அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று, பரிசோதித்தனர். அதில், அவர் 7 மாதம் கர்ப்பமாக  இருப்பதாக தெரியவரவே, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, குடும்பத்தினர் கேட்டபோது, ஸ்வீட் மாஸ்டர் செய்த கசாமுசாவை மாணவி, விளக்கியுள்ளார். இதன்பேரில், சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக, இலியாஸ் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.