மோடிக்கு சூர்யா போதும்! நான் எதுக்கு? காப்பான் விழாவில் விளாசிய ரஜினி! பறந்த விசில்!

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நடிகர் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


சென்னையில் சூர்யா நடிப்பில் கேவிஆனந்த் இயக்கியுள்ள காப்பான் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது, புதிய கல்விக் கொள்கை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று பலரும் என்னை கேட்கின்றனர்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஏன் பேசக்கூடவில்லை என்று கேட்கின்றன்ர. ஆனால் இந்த விவகாரம் குறித்து சூர்யா பேசியுள்ளார். அவர் மிகச்சரியாக பேசியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நான் ஆதரிக்கிறேன். இவ்வாறு ரஜினி கூறிய போதுஅரங்கமே அதிர்ந்தது. விசில் சப்தம் விண்ணை பிளந்தது. 

தொடர்ந்து பேசிய ரஜினி, அகரம் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு பல உதவிகள் செய்து வருபவர் சூர்யா. அவருக்கு மாணவர்களின் கஷ்டம் தெரியும். எனவே அவர் சரியாகத்தான் பேசியுள்ளார். இந்த விஷயத்தில் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டுவிட்டது. எனவே நான் பேசித்தான் மோடிக்கு கேட்க வேண்டும் என்பது இல்லை. இவ்வாறு ரஜினி பேசினார்.