தினமும் 3 வேளை சாப்பாடு..! 11 கிராம முதியவர்களுக்கு டிபன் கட்டி அனுப்பும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி!

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர் தனது சொந்த கிரமாத்தை சுற்றியுள்ள முதியவர்களுக்கு தினமும் 3 வேளை உணவை டிபன் கேரியர் மூலம் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாக தேடிச் சென்று வழங்கி வருகின்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அனைவரும் சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர் தனது வியாபரத்தில் மட்டுமின்றி சேவையிலும் சூப்பர்தான் என்று பாராட்டி வருகின்றனர்.


துணிகடை என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னையில் உள்ள சூப்பர் சரவணாஸ்டோர் தாங்க. அந்த அளவுக்கு தனது வியாபரத்தில் உழைத்து முன்னேறியவர் தான் ராஜரத்தினம் அவர்கள் . இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பணிக்க நாடார் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு தினமும் 3 வேளையும் உணவு வழங்கி தன்னால் முடிந்த சேவை செய்து வருகிறார். குறிப்பாக உற்றார் உறவினர்கள் இல்லாத முதியோர், உறவினர்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பதால் கவனிக்க ஆள் இன்றி தனிமையில் தவிக்கும் முதியோர், வேலைக்கு செல்ல இயலாத ஊனமுற்றோர் ஆகியோருக்கு கடந்த 11 ஆண்டுகளாக வீடு தேடிச் சென்று டிபன் கேரியரில் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கும் வேளையில், 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் பசியுடன் தவிக்கும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளரிடம் உதவ கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, பொது மக்களுக்கு உதவும் வகையில் அன்னதான சேவையை அவர்களது வீடுகளுக்கும் நீடித்துள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் முகவரியை பெற்றுக் கொண்டு தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை போல அவர்களுக்கும் தினமும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என உணவுவகைகளை காலதாமதமின்றி கொண்டு சேர்த்து தனது சேவைகளை செய்து வருகின்றனர். இந்த சேவைக்காக சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம் அவர்கள் ஒரு மேலாளர், சமையல்காரர்கள் மற்றும் சர்வீஸ் பாய்ஸ் என 6 பேர் கொண்ட குழுவினரை கொண்டு முழு நேரப்பணியாக இந்த சேவையை செய்து வருகின்றனர்.

தற்போது 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சமைக்க இயலாமல் தவிக்கும் முதியோர்களை அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கும் உணவு கேரியர்களை விரைவாக கொண்டு சேர்க்க தொடங்கியுள்ளனர். தற்போது தினமும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பசியாற்ற, டிபன் கேரியரில் சுடச் சுட அடைக்கப்பட்ட சாப்பாடு விரைவாக கொண்டு சேர்க்கப்படுகின்றது.

இந்த சேவைகளை கண்ட பொது மக்கள் அனைவரும் ”சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் தனது வியாபரத்தில் மட்டுமின்றி சேவை மனப்பான்மையிலும் சூப்பர் தான்” என்று பாராட்டி வருகின்றார்கள். இந்த மாதரி சூழ்நிலையில் பொதுமக்களுக்கு உதவுவது மிகவும் நற்பண்பு மிக்க செயலாகும்.