ஹாஸ்டலுக்குள் படம் எடுத்த நல்ல பாம்பு! உறங்கிய நிலையிலேயே வர்ஷாவுக்கு நேர்ந்த விபரீதம்! பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளியின் விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கொடைக்கானல் அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் வர்ஷா. 9ம் வகுப்பு மாணவியான வர்ஷா திண்டுக்கலில் உள்ள அவர் லேடி என்ற தனியார் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தார். நாள்தோறும் கொடைக்கானல் சென்றுவிட்டு வரமுடியாது என்பதால் அவர் லேடி பள்ளியின் விடுதியிலேயே தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மாணவி விடுதி அறையில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று அவரது அறைக்குள் நுழைந்துள்ளது. பின்னர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வர்ஷாவை கடித்துள்ளது. 

பாம்பு கடித்தவுடன் வர்ஷா அலறியதை கேட்ட சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் அளித்தனர். பின்னர் வர்ஷா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வர்ஷாவை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த சம்பவத்தை கேட்டு பள்ளி நிர்வாகம், சக மாணவிகள் என அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். விடுதியில் உரிய பாதுகாப்பு இல்லாததே பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் நுழைய காரணம் என சிலர் தெரிவித்தனர்.

விடுதியில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த சம்பவம் கேட்ட மற்ற மாணவிகளின் பெற்றோர்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர். மேலும இரவில் தூங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினர்.