நாமக்கல் மாவட்டத்தில், சொத்துக்காக, சொந்த தம்பியை அக்கா கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் கொடூரம்! உடன் பிறந்த தம்பியை அடித்தே கொன்ற அக்கா! பதற வைக்கும் காரணம்!

வேமன்காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிவேல், இவரது அக்கா கலா. இவர்களுக்கு ஏற்கனவே ஏராளமான சொத்துகள் உள்ள நிலையில், பழனிவேலுக்கு, சொத்தில் பங்கு தருவது பற்றி கலாவுக்கு கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன்பேரில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (சனி) மாலை பழனிவேல் கீழே விழுந்துவிட்டதாகக் கூறி, அவரது அக்கா கலாவும், குடும்பத்தினரும் பழனிவேலை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், அனைவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பழனிவேல் இறந்துவிட்டதாக, தெரியவரவே, உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பழனிவேலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தபோது, சொத்துக்காக, கலா உள்ளிட்டோர் அவரை கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. இதன்பேரில், தலைமறைவாக இருந்த கலா, அவரது கணவர் மற்றும் மகனை போலீசார் தேடிப் பிடித்து, கைது செய்தனர்.