புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை.! ஆம் இந்தியாவில் தான்..
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் இந்தியாவில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது, 'பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது இந்தியா.புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது.
அசாம் மாநில பெண் திருப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை.புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் உரிய ஊதியமும் இல்லை,' என்று வருத்தம் தெரிவித்தனர்.