9 வயது சிறுமி பலாத்காரம்! காமுகனை கையும் களவுமாக பிடித்த தந்தை! பிறகு நிகழ்ந்த தரமான சம்பவம்!

ஒன்பது வயது சிறுமியை 1 மாத காலமாக பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்த 55 வயது நபர் கையும் களவுமாக சிக்கிய போது அந்த சிறுமியின் தந்தை உள்ளிட்டோர் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


சென்னை மந்தவெளி ஸ்ரீனிவாசபுரம்,153 வது பிளாக்கில் வசித்து வருபவர் அலெக்ஸ். 55 வயதான இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகே சிறுமி ஒருவர் உள்ளார். இன்று காலை சிறுமியை வீட்டில் காணாத நிலையில் தந்தை தேடியுள்ளார்.

பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரத்தில் சிறுமி எங்கு சென்றார் என்று தந்தை தேடியுள்ளார். அப்போது அலெக்ஸ் வீட்டின் முன்பு சிறுமியின் காலணிகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த தந்தையின் ரத்தம் கொதித்துள்ளது.

காரணம் 9 வயது சிறுமியை 55 வயதான அந்த காம கொடூரன் ஆடைகளை களைந்து சீரழித்துக் கொண்டிருந்திருக்கிறான். ஆத்திரம் உச்சிக்கு சென்ற அந்த தந்தை சிறுமியை அந்த கொடூரனின் பிடியில் இருந்து மீட்டார். அத்துடன் அந்த கொடூரனுக்கு தர்ம அடி கொடுத்து தெருவுக்கு இழுத்து வந்தார்.

மேலும் கையில் கிடைத்தவற்றை கொண்டு அவனை அடித்து உதைத்தார். நிகழ்ந்ததை அறிந்த மற்றவர்களும் தந்தையுடன் சேர்ந்து அவனை அடித்து உதைத்தனர். விசாரணையில் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை கடந்த ஒரு மாத காலமாக அலெக்ஸ் பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. 

சிறுமியின் உறவினர்கள் பிடித்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் அலெக்சை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.