ஸ்கூல் டீச்சருடன் பாலியல் வல்லுறவு! வீடியோ எடுத்து மிரட்டி ஆசையை தீர்த்த பயங்கரம்!

ஸ்கூல் டீச்சரை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ராமஷிஷ் யாதவ். மும்பை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், நேவி மும்பையில் இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை செல்ஃபோனில் படம்பிடித்து வைத்துக் கொண்ட, ராமஷிஷ், உண்மையை வெளியில் சொன்னால் இதனை வெளியேவிடுவேன் என்று, அந்த டீச்சரை மிரட்டிவந்துள்ளார்.

இதனால், பயந்து பயந்து காலம் ஓட்டிவந்த அந்த டீச்சரை, கடந்த ஜனவரி மாதம் ராமஷிஷ் மீண்டும் மிரட்டியுள்ளார். இதன்பேரில், போலீசில் புகார் செய்ய, அப்பள்ளி ஆசிரியை முடிவு செய்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அவர், ஒருவழியாக, போலீசில் தனக்கு நடந்த அவலத்தை எடுத்துக் கூறினார். 

இதையடுத்து, போலீசார் ராமஷிஷை கைது செய்து, அவரிடம் இருந்த செல்ஃபோனையும் பறிமுதல் செய்தனர். அதில் உள்ள வீடியோ உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும்படி, தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.