உனக்கு உல்லாசம்! எனக்கு பணம்! மாதம் ஒரு ஆணுடன் சல்லாபம்! சேலம் மேகலா ரகசியங்கள்!

பல ஆண்களை திருமணம் செய்து தன்னையும் ஏமாற்றியதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மீது புகார் அளித்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் தொடர்புடைய பெண்ணின் புகாரால் தலைமறைவாக உள்ளார்.


கடலூர் மாவட்டம், வளையமாதேவியைச் சேர்ந்தவர் பாலமுருகன், இவர், சேலம் எஸ்.பி., தீபா கானிகேரிடம் அளித்த புகாரில்,  தான் வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்ததாகவும், அதைப்பார்த்து சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த மருளையம்பாளையத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் தன்னிடம் 2016-ஆம் ஆண்டில் இருந்து பேசி வந்ததாகவும் தெரிவித்தார்.  

தனது குடும்பம் ஏழ்மையில் இருப்பதாக மேகலா கூறியதை நம்பி, பணம், நகை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் என 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகவும், ஆனால் திருமண பேச்சை தொடங்கினால் மேகலா பேச்சைக் குறைத்துக்கொண்டதாகவும் கூறினார். தனக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று அவரது செல்ஃபோனை எடுத்துப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது தன்னைப் போல் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் தொடர்பிலிருப்பது தெரிய வந்ததாகவும், உடல் அழகை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து அனுப்பி மேகலா இளைஞர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல்  மோசடி செய்திருப்பாதாகவும் தெரிவித்தார். மேலும் முறை வைத்து மாதம் ஒரு ஆணை திருமண ஆசை காட்டியும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியும் மேகலா ஏமாற்றியுள்ளதை கண்டுபிடித்துள்ளது.

தான் விலை மாது என்றும், நீ ஏமாந்தால், நான் என்ன செய்ய முடியும் என்றும்மேகலா தெரிவித்ததாகவும் பாலமுருகன் கூறினார். இந்நியில் ராஜா என்பவருடன் சேர்ந்துகொண்டு மேகலா தன்னை மிரட்டி கட்டாயத் தாலி கட்டச் செய்ததாகவும், மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்த பாலமுருகன் மேகலாவிடம் தான் இழந்த பணம், நகை, பொருட்களை மீட்டுத்தரக் கோரினார்.

இதனிடையே பாலமுருகன் தனது படங்களை பல ஆண்களுடன் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு, தன்னை கொடுமைப்படுத்துவதாக மல்லூர் மகளிர்  காவல் நிலையத்தில் மேகலா அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலமுருகன் தலைமறைவாகியுள்ளார்.