திருநங்கையை ஓசியில் அழைத்த இன்ஸ்பெக்டர்! பிறகு நேர்ந்த விபரீதம்! வைரல் வீடியோ!

சேலம்: ஓமலூர் மெயின் ரோட்டில் நள்ளிரவில் நின்றுகொண்டிருந்த திருநங்கை ஒருவரை போலீசார் கொடூரமாக தாக்கும் காட்சிகளுக்கு, சமக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக, தி நியூஸ் மினிட் ஊடகம் வைரல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சனா என்ற பெயருள்ள திருநங்கை ஓமலூர் மெயின் ரோட்டில் நின்றுகொண்டிருப்பதும், அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட சிலர் லத்தியால் சராமரியாக அடிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி பாதிக்கப்பட்ட சனா கூறுகையில், ''நான் இந்த பகுதியில் விபச்சாரம் செய்வது வழக்கம். 20 நாட்கள் முன்பாக, என்னை ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். பிறகு, நான் ஜாமீனில் வந்துவிட்டேன். இந்நிலையில்தான், இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்னை குறிவைத்து, அடிக்கடி வந்து இப்படி அடித்து துன்புறுத்துகிறார்.

முதலில், அவர் என்னிடம் எவ்வளவு ரேட் என கேட்பார். நான் ரேட் பற்றி சொன்னதும், அவர் திடீரென அடிக்க ஆரம்பிப்பார். பிறகு, சில போலீசாரை உதவிக்கு அழைத்து, என்னை ஆட்டோவில் ஏற்ற முயற்சிப்பார். யாரேனும், பொதுமக்கள் இதனை கேள்வி கேட்டால், அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். என்னை கைது செய்ய வேண்டும் எனில், போலீஸ் வாகனத்தில்தானே ஏற்ற வேண்டும். ஆட்டோவில் ஏற்ற அவர் முயற்சிப்பது என்ன அர்த்தம் என்று எனக்கு புரிகிறது. காசு தராமல் என்னிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள மிரட்டுகிறார் என புரிந்துகொண்டேன்,'' என்று கூறியுள்ளார். 

இந்த தாக்குதலுக்குப் பின், அங்கிருந்து தப்பியோடிய சனா,  மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பிரச்னை தெரியவந்ததும் சேலம் கமிஷனர் சங்கர் குறிப்பிட்ட இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்தும்படி, உத்தரவிட்டுள்ளார்.