ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்டு மகனை அந்த செயலில் ஈடுபட வைத்த சபரிமலை ரஹானா..! வைரல் வீடியோவால் ஏற்பட்ட அதிர்வலைகள்!

ஆடைகள் இல்லாமல் படுத்துக்கொண்டு தன்னுடைய சொந்த மகனை தனது உடலில் ஓவியம் வரை வைத்த சபரிமலை ரஹானா பாத்திமாவின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக.


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அடுத்து சாமி தரிசனம் செய்ய சென்றவர்தான் ரஹானா பாத்திமா. ஆனால் அங்கு நிலவிய கடும் போராட்டத்தால் அவர் சாமி தரிசனம் செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடிய நபர். ஏதேனும் பதிவு ஒன்றை பதிவிட்டால் அது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி விடும். எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு இடையே வாழ்ந்து வரும் ரஹானா பாத்திமா தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது அவர் தற்போது வெளியிட்டுள்ள அந்த ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் கட்டிலில் அரை நிர்வாணத்தில் படுத்துக்கொண்டு இருக்கும் ரஹானாவின் உடலில் அவரது சிறுவயது மகன் மற்றும் மகள் ஆகியோர் இணைந்து ஓவியம் வருகின்றனர். அந்த வீடியோவிற்கு பாடி அண்ட் பாலிடிக்ஸ் என்று தலைப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கேப்ஷனாக, அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் ஒரு பொழுதும் பெண்களின் உடலை அவமதிக்க மாட்டார்கள் என்றும், பெண்களின் உடல்களை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு தங்களுடைய வீட்டில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றும் பாத்திமா கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடக்க ஆரம்பித்தது. மேலும் இதனை பார்த்து அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பாத்திமாவுக்கு எதிராக தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அதனை பார்த்த ஒரு சிலர் சிறு வயதில் அவர்கள் என்ன செய்கிறார் என்பதைக் கூட அறிந்து கொள்ளாத இந்த வயதில் அவர்களை இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுத்துவது மாபெரும் குற்றம் என்று கூறிவருகின்றனர்.‌ இதனை தொடர்ந்து பாத்திமா வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு வெளியான சூழ்நிலையில் அவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.