இரண்டு குழந்தைகள் மட்டும்தான் பெற வேண்டுமா? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிர்ப்பு வலுக்கிறது.

இந்தியாவில் வேலை இல்லாமை காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.


அதனை சரி செய்வதற்கான பணியில் ஈடுபடாமல், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய விவகாரம் வைரலாகி கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஆம், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியாவின் வளர்ச்சியை உறுதிபடுத்த, இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு அர்த்தம், இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இந்த விவகாரத்துக்குப் பதில் அளித்திருக்கும் ஒவைசி, "எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. பல பா.ஜ,க.. தலைவர்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே ஆர்.எஸ்.எஸ்.-க்கு இருக்கிறது. இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மைதான்" என்றார். மேலும் அவர், 2018ல் வேலைவாய்ப்பின்மை காரணத்தினால் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதாக குற்றக் காப்பகம் தெரிவிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களால் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர முடியாது.

அதனால்தான், இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறீர்கள். இந்திய மக்கள் தொகையின் 60 சதவீதம் பேர், 40 வயதிற்கு கீழ் உடையவர்கள்" என்றும் ஒவைசி தெரிவித்தார். இனி எத்தனை முறை சாப்பிட வேண்டும், எத்தனை முறை குளிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். மூலம் சட்டத்தை மோடி கொண்டுவருவாரோ..?