நிவர் புயலில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் கன மழை பெய்து நான்கு பேர் உயிரிழந்தனர்.


அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தற்போது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கெங்காவரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. தனபால் என்பவரின் மகன் திரு. சரவணன் என்பவர் வரவேற்பு பந்தலில் காற்று அடித்து கம்பம் சரிந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திரு. சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் bghJ நிவாரண நிதியிலிருந்தும் ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.