கிராமங்களுக்கு கொரோனா வருமுன் தடுத்திட.. வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது முதல்வரே - கமல்ஹாசன்

கொரோனாநோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள்ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது.


நகரங்களில் பரவலான ஆய்வுகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை ஆராயும் அரசு, கிராமப்புறங்களின்மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். நோய்த்தொற்று கண்டறிதல், அதற்கான சிகிச்சைகள்,அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் கிராமங்களில்அதிகப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருப்பதற்குகாரணமேகிராமங்களை அரசு இத்தனை நாள் கண்டு கொள்ளாமல்விட்டதே காரணம். 

தமிழகத்தில் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதாரமையங்கள் முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள், மருத்துவ ஊழியர்களோ இன்றி தான் செயல்படுகிறது. பல நவீன மருத்துவமனைகளைக் கொண்ட பெரும் நகரங்கள்கொரோனாவின் தாக்கத்தில் தள்ளாடும்போது ஆரம்ப சுகாதாரமையங்கள், நோய்த்தொற்று அதிகரித்தால் என்னவாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

முறையான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதாரமையங்கள், அது இல்லையென்றால் அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் கிராமங்களில் இந்த கொரோனா தொற்று வருமுன் தடுக்கும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கிராமங்களில்இத்தொற்றுபரவினால் நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பொருளாதார அளவில், மருத்துவ அளவில் மட்டுமல்ல அடிப்படைத்தேவைகள் கூட கிட்டாத அளவிற்கு செல்லக் கூடும். 

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என பாடப்புத்தகத்தில் மட்டும் சொல்லாமல், செயலில் காண்பித்து, கிராமங்கள்இத்தொற்றுபரவலில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.