இரவு மாமனார் வீட்டில் தங்கிய கர்ப்பிணி பெண்! காலையில் எழுந்து எடுத்த விபரீத முடிவு! அதிர வைக்கும் சம்பவம்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள க. மாமனந்தல் பகுதியை சேர்ந்தவர் வனிதா, இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனிதாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் மற்றும் அவரது கணவர் அறிவழகன், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனிதாவுக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு தனது மாமனார் வீட்டில் தனது குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போதும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வனிதா தனது வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அருகிலிருந்தவர்கள் வனிதா தூக்கில் தொங்குவதை பார்த்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மற்றும் வனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரது கணவன் அறிவழகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.