நீட் தேர்வில் முதலிடம்! சென்னை மாணவியின் அசத்தல் சாதனை! எப்டி தெரியுமா?

பொன்னேரியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி, ஸ்ருதி 10-12 வகுப்பு பாடங்களை திரும்ப திரும்ப படித்ததாலே தான் தமிழக அளவில் முதலிடம் பெற முடிந்ததாக பெருமிதம் கொண்டார்...


மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி முடிந்த நிலையில் அதற்கான முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி சுருதி 685 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளார். மேலும் இந்திய அளவில் 57-வது இடத்தை இவர் பெற்று உள்ளார்.

திருவள்ளூர் மணவாள நகர் பகுதியை சேர்ந்த மாணவி சுருதியின் தந்தை கோவிந்தராஜ் மற்றும் தாய் கோமதி இருவருமே மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாணவி சுருதி நிருபர்களிடம் கூறியதாவது:-

திரும்ப திரும்ப படித்து தயாராக இருந்ததால்  தேர்வு எளிதாக இருந்தது எனவும் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற முடிந்தது எனவும் கூறியவர்,

மேலும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்றால் கூட படிப்பேன். எனக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது என பெருமிதம் கொண்டார்.