பாலுறவுக்கு மறுத்த இளம் பெண்ணின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நிர்வாண வீடியோ எடுத்த காதலன்! உல்லாசத்துக்கு மறுத்த காதலி! பிறகு நேர்ந்த விபரீதம்!

இளம் பெண் அகமதாபாத் அருகே உள்ள சிரோஹி என்ற இடத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற போது குற்றவாளியை முதன் முதலில் சந்தித்தாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் காதலி குளியலறைக்குச் சென்ற நேரம் உட்பட சிறுமி ஆடையின்றி இருந்த நேரங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்தப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டி அந்த நபர் காதலியை தவறான உறவுக்கு அழைத்ததாகவும், அந்த காதலி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் ஃபேஸ்புக்கில் அந்தச் சிறுமியின் நிர்வாணப் படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டான்.
இது தொடர்பான காதலியின் பெற்றோரின் புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலியின் பாட்டி ஊரில் இருந்த குற்றவாளியை கைது செய்தனர்.