பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர பட்டாக்கத்தியுடன் மோதல்! ஏழு மாணவர்கள் உயிருக்கு ஆபத்து!

சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது அடிக்கடி நடைபெறும் சமாச்சாரம்தான்.


ஆனால், இன்று சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே இரண்டு பிரிவாக மோதிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்று பட்டப்பகலில் சென்னை அரும்பாக்கத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அரிவாள், பட்டாக்கத்தியுடன் ரவுடியைப் போன்று ஒருவரையொருவர் விரட்டி வெட்டினார்கள்.

இந்த மோதலில் ஏழு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை எப்படியிருக்கிறது என்பது குறித்த அறிக்கை இன்னமும் வரவில்லை.

அரிவாளால் வெட்டிய கும்பல் காவல் துறையிடம் பிடிபடாமல் தப்பி ஓடியிருக்கிறது. மாணவர்கள் மட்டும் இந்த வன்முறையில் ஈடுபட்டார்களா அல்லது கூலிப்படையும் களம் இறங்கியதா என்று காவல் துறை விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

மாணவர்களை படிக்க அனுப்பினால் இப்படி கூலிப்படை போல் இயங்கி வருகிறார்கள். அதுவும் பட்டப்பகலில் பயணிகள் முன்பு அடித்துக்கொள்ளும் மாணவர்களை ஒட்டுமொத்தமாக கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்கள் வன்முறையில் இறங்க மாட்டார்கள்.