சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

கடைகளில் நூல்கோல் இருந்தாலும் பலரும் இதனை வாங்குவதே இல்லை. இதனை எப்படி சமைப்பது என்று புரியாமலும், இதில் சத்துக்கள் இருக்கிறதா என்று தெரியாமலும் தவிர்க்கிறார்கள்.


பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும்.

·         நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.

·         வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கி இதயக் கோளாறு வராமல் பாதுகாக்கிறது.

·         நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

·         நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் வைட்டமின் அதிகம் இருப்பதால், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும் நூல்கோல் மிகவும் சிறந்த உணவு.