தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம்! இந்த 6 மாவட்டங்களை புரட்டிப் போடப் போகுது மழை! எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை வேலூர் திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை மழையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை வேலூர் திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை 

சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் புதுவை கடலூர் ஈரோடு நீலகிரி கோயம்புத்தூர் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி மதுரை பெரம்பலூர் அரியலூர் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன கனமழை பெய்யக்கூடும். கடந்த 24மணி நேரத்தில் 14 இடங்களில் மிக கனமழை, 53 இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 19 சென்டி மீட்டர் மழையும் கடலூரில் 17 சென்டி மீட்டர் மழையும் நெல்லையில் 15 சென்டி மீட்டர் மழையும் காஞ்சிபுரத்தில் 13 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது 

மீனவர்களை எச்சரிக்கை லட்சத் தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் இன்று குமரிக்கடல் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளை லட்சத்தீவு பணிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.