சொகுசு பங்களா! உள்ளே இளம் பெண்கள்! அடிக்கடி வந்து சென்ற இளம் ஆண்கள்! நாகர்கோவிலில் ஹைடெக் விபச்சாரம்!

நாகர்கோவில்: சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த பெண் புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள சொகுசு பங்களாவில், விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இங்கு இரவு நேரத்தில் ஆண்கள் பலர் வந்து செல்வதன் பேரில் போலீசார் இதனை உறுதி செய்தனர்.  

பிறகு போலீசார் ரகசியமாக அந்த பங்களாவை கண்காணித்து வந்தனர். நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில் இளைஞர்கள் சிலர் சந்தேகப்படும் வகையில் பங்களா உள்ளே சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பி வந்தனர். இரவு நேரம் என்பதை கடந்து பகலிலும் வெளிப்படையாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 2 ஆண்கள், இளம்பெண்களிடம் உல்லாச நிலையில் இருந்தனர். அந்த 2 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறி, பெண் புரோக்கர் ஒருவரையும் கைது செய்தனர்.