பிறக்கும் போதே குழந்தைக்கு அந்த நோய்.! அதனால் தான்..! பச்சிளம் குழந்தையை சாக்கடைக்குள் தூக்கி வீசிய தாய்! அதிர வைக்கும் காரணம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை ஊர் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் மாரியம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையுடன் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சந்தேகமடைந்த ஊர் பொதுமக்கள் அப்பெண்ணை கவனித்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அப்பெண் தான் வைத்திருந்த பச்சிளம் குழந்தையை வாய்க்காலில் போட்டுள்ளார்.

இதையடுத்து அதைப்பார்த்த ஊர் பொது மக்கள் உடனே அதிர்ச்சி அடைந்த குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த அந்த பெண் தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரையும் வாய்க்காலில் இருந்து மேலே எடுத்து வந்து மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறையினர் விசாரணையில் அந்த பெண் கூறியதாவது,காஞ்சிபுரம் மாவட்டம் வாலஜாபாத் காவிரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த விநாயகம் மனைவி மீனாட்சி(வயது 34)மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மீனாட்சி விநாயகத்தை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு காலித்து திருமணம் செய்து கொண்டதாகவும்.அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி அவரது கணவரை விட்டு பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது மீனாட்சிக்கும் கட்டிட மேற்பார்வையாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.அந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடைக்கு எடுத்து கணவன் -மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீனாட்சி கர்ப்பமானார்.

இதையறிந்த கட்டிட மேற்பார்வையாளர் மீனாட்சியை தனியே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து மீனாட்சிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சில நாட்கள் மீனாட்சி அவரைத் தேடியும் கிடைக்காத நிலையில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். 

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மீனாட்சி நோயினால் பாதிக்கபட்ட ஆண் குழந்தையை எப்படி வளர்ப்பது என எண்ணினார். பின்னர் விழுப்புரம் வந்து குழந்தையை கழிவுநீர் வாய்க்காலில் வீசி தானும் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சியை கைது செய்துள்ளனர்.