அயோத்தி தீர்ப்பில் மு.க.ஸ்டாலின் யார் பக்கம்? ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

நாங்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்போம் என்று சொல்லிவரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இன்றைய அயோத்தி தீர்ப்புக்கு ஆதரவாக அறிக்கை அளித்து பரபரப்பூட்டி இருக்கிறார்.


நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வு கண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு,

அதை எந்தவித விருப்பு_ வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத்தன்மையை எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் இன்று இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசுகையில், ‘‘உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த்’’ என்று கூறியிருக்கிறார்.