மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு அழைத்த கள்ளக்காதலியை இளைஞன் ஒருவன் கொடூரமாக கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு அழைத்த 13 வயது மூத்த கள்ளக்காதலி! இளைஞன் எடுத்த கொடூர செயல்!

நாமக்கல் மாவட்டம் எருமைபட்டியில் உள்ள காவக்காரன்பட்டியில் தூக்கில் தொங்கியபடி ஆண் மற்றும் பெண் ஆகியோரின் சடலங்கள் கண்டறியப்பட்டது . இதனை அங்கிருந்த மக்கள் கண்டறிந்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்று சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை உடைத்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து போலீஸார் இவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டதில் இருவரையும் பற்றிய தகவல்கள் வெளியாகின. ஆண் திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்த பிரகாஷ் என்று தெரியவந்தது. மேலும் அப்பெண் அதே ஹோட்டலில் வேலை பார்த்ததும் விசாரணையில் வெளிவந்தது . இளைஞனை விட அந்த பெண்ணுக்கு 13 வயது அதிகம் ஆகும்.
இறந்த அந்த பெண்ணின் பெயர் அம்சா என்றும் அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர் என்றும் தெரிய வந்தது. மேலும் இவர் காவக்காரன்பட்டியை சேர்ந்தவர். இவருடைய கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அம்சா இந்த தனியார் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தார் . அங்கு அவருக்கு பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆகவே அவர்கள் இருவரும் காவக்காரன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் உல்லாசமாக இருக்க சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் பிரகாஷ் அம்சாவை உல்லாசமாக இருக்க மிகவும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதன் மூலம் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரகாஷ் அந்த பெண்ணை உணர்ச்சிவேசப்பட்டு கொலை செய்துள்ளார். பின்பு பிரகாஷ் என்ன செய்வது அறியாது தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலிஸாஸர் சந்தேகித்துள்ளனர்.
இதனையடுத்து பிரகாஷ் -இன் இருசக்கர வாகனம் மற்றும் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி ஆகிய பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.