மதுரையில் மாணவன் தனக்கு தானே விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக தங்கியிருந்த டாக்டர்! கையில் விஷ ஊசி போட்டு பலியான திடுக் சம்பவம்! பரபரப்பு காரணம்!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கல்லூரியில் மயக்கவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்காமல் நண்பர்களுடன் மதுரையில் உள்ள முனிசிபாலிட்டி விடுதியில் அறை எடுத்து தங்கி வருகிறார்.
இந்நிலையில் பணிச்சுமை அதிகம் இருந்ததாலும் மன உளைச்சலுக்கு ஆளானதாலும் மிகவும் குழம்பிப் போயிருந்த அவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷ ஊசியை தனக்குத்தானே போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அறைக்கு வந்த நண்பர்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் மீட்டனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அவர் படித்த ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை குறித்த காரணத்தை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.