நள்ளிரவில் வீட்டுக் கதவை தட்டிய ஆண் போலீஸ்! பதற்றத்தில் தற்கொலை செய்த பெண் போலீஸ்! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

வீட்டில் கணவன் இருக்கும் நேரத்தில் வந்து கள்ளக்காதலனான ஆண் போலீஸ் கதவை தட்டியதால் பெண் போலீஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முத்துவாளன் (வயது 40). அவருடைய மனைவி அமுதா (35). அமுதா உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஜான்சி (15) என்ற மகளும், அன்பு (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பெண் போலீஸ் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.  அமுதா தற்கொலைக்கு பின்னர் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், கடைசியாக அவர் யார், யாரிடம் பேசினார் என்பது குறித்தும் மற்றும் அவருக்கு வந்த வாட்ஸ்–அப் தகவல்கள் குறித்தும் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தேனூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆறுமுகம் (35) என்பவர் அடிக்கடி அமுதாவுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர்கள் அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்துள்ளனர். அமுதாவுடன், ஆறுமுகம் அடிக்கடி செல்போனில் பேசுவதும், குறும்படங்கள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். மேலும் அமுதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

இந்தநிலையில் கடந்த 24–ந்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட ஆறுமுகம், அமுதாவின் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்பின்பு 2 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அவர், வீட்டின் முன்பு நிற்பதாக அமுதாவிடம் கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அமுதா அன்றைய தினம் இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் நேற்று கைது செய்து உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ்காரர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டில் கணவர் இருக்கும் நேரத்தில் வந்து ஆறுமுகம் தொந்தரவு செய்துவிடுவாரோ என்று பயந்து அமுதா இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள்.