பஞ்சாப் மாநிலத்தில் ஹோட்டல் அறையில் காதல்ஜோடி இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய இளம் காதல் ஜோடி! உள்ளே செய்து கொண்ட அதிர வைத்த செயல்!

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் விடுதி ஒன்றில் இன்று காலை இளம் காதல்ஜோடி இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மற்றும் இறந்த இந்த இரு காதல் ஜோடிகள் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார் இறந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் 21, மற்றும் அவரது காதலி அர்ச்சனா 17 என்பவர்கள் தான் என போலீசார் உறுதிசெய்தனர். மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாகவும் அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விடுதி உரிமையாளரிடம் விசாரிக்கையில் அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கு வந்ததாகவும் இருவரும் வெளியே செல்லாமல் அறையின் உள்ளே இருந்ததாகவும் விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை உணவு அளிப்பதற்காக விடுதியில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் அவர்களின் கதவை தட்டியுள்ளார். கதவு தட்டி நீண்டநேரம் திறக்கப்படாத நிலையில் அதிர்ச்சி அடைந்த நபர் உடனே நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு சாவி மூலம் கதவை நீக்கி உள்ளே சென்று பார்த்த போது ஒரே கயிற்றில் இருவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.
உடனே அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகிகள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.