கோவில் கோபுரங்களின் உயரங்களுக்கும் கோபுரக்கலசங்களின் தேவைகளுக்கும் இன்றைய ஆராச்சியாளர்கள் குடுக்கும் பதில்கள் வியப்பூட்டுகின்றன. நம் முன்னோர்கள் கோவில்களின் அளவையும் அமைப்பையும் பற்பல அனுபவங்களுக்கு பின்னரே இத்தனை ஆக்கபூர்வமாக அமைத்திருபார்கள் என்பது தெளிவாகிறது.
கோயிலை மட்டும் ஏன் உசரமா கட்டுறாங்கன்னு தெரியுமா?

அனைத்து
ஊர்களிலும் உயரமான கோயில்களையும் கோபுரங்களையும் பார்த்திருப்பீர்கள். ஏன் கோயில் இல்லா
ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள், ஏன் உயரம் உயரமாக் கோயில் கட்டினார்கள்
தெரியுமா?
மனிதனின் நலனை முன்னிட்டுத்தான் கோயில் உயரமாக கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.