திருச்சி அருகில் பிரபல ரவுடி தன் மனைவியுடன் இருந்த கள்ள காதலை முடித்துக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், தூக்கத்தில் இருந்த ரவுடியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடியுடன் உல்லாசமாக இருந்த மனைவி! நேரில் பார்த்த கணவன்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!
திருச்சி சமய புரத்தை சேர்ந்தவர், பலே ரவுடி ஆனந்த் இவரது பேரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் மனைவியுடன் சகஜமாக பேசத் துவங்கிய ஆனந்த். பழக்கம் காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் இணைந்து அடிக்கடி வெளியில் ஒன்றாக செல்வதும், தனிமையில் சந்தித்து பேசுவது என மிக மோசமாக எல்லைத்தாண்டியுள்ளனர். இது குறித்து பல முறை மனைவியை விஜய் கண்டித்தும், பலனில்லை. இதற்கிடையில், ஆனந்த தனது மனைவியுடன் பைக்கில் சுற்றுவதை பார்த்த ஆத்திரத்தில், இருந்துள்ளார்.
இந்த நிலையில் விஜயின் மனைவி ஆனந்தை தனது வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனை பார்த்து விஜய் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
எனவே ஆனந்த் வழக்கமாக தூங்கும் இடத்தில் அசந்து தூங்க அங்கு வந்த விஜய், ரவுடி ஆனந்த் தலையில் கல்லைத் தூக்கிபோட்டு கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். இதை அடுத்து கொலைப்பற்றிய தீவிர விசாரணையில், விஜய் கொலை செய்தது அம்பலமானதால் அவர் கைது செய்யபட்டுள்ளார்.