டிவி செல்போனில் எப்போதும் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச் செயல்!

தினமும் இரவில் டி.வி. யில் ஆபாச திரைப்படங்களையும், செல்போன் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கணவன் திடீர் ஆத்திரத்தில் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.


மும்பை அந்தேரியைச் சேர்ந்தவர் சேத்தன் சவுகலி. இவருக்கு வயது 32. இவரது மனைவி ஆரத்தியின் வயது 22. பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை 10 வயது தான்  இவர்களுக்கு 2 வயது மகனும் இருக்கிறான். 

இந்நிலையில், ஆரத்தி  டி.வி.யில் ஆபாச படங்கள், செல்போன், டி.வி. இணையதளத்திதில் சிறப்பு வீடியோக்கள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் தொடர்ந்து  திரைப்படங்களையும் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சேத்தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து ஆரத்தியை வீட்டை விட்டு வெளியேறுமாறு சேத்தன் கூறியதாகவும் அதன் பிறகும் அது குறித்து கவலைப் படாமல் ஆரத்தி வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் எல்லை மீறிய நிலையில் செய்வது என்ன என்பதை உணராத சேத்தன் ஒரு நைலான் கயிறை எடுத்து  வந்து தாக்கியதாகவும், ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தில் போட்டு இறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆரத்தி உயிரிழந்த பிறகு  தான் சேத்தனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்களது 2வயது மகன் அனாதையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.