கணவனின் தவறான உடல் சார்ந்த தேடல்..! மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்த மனைவி! மதுரை சம்பவம்!

கணவன் தன்னை விட்டு வெறொரு பெண்ணுடன் முறையற்ற வாழ்வு வாழ்ந்ததை பொறுக்காத மனைவி அவரது பிறப்புறுப்பை அறுத்து தனது கோபத்தை தணித்துள்ளார்.


மதுரை சீட்டாலாட்சி பகுதியில் ரஞ்சித்குமார், சுபா தம்பதி வசித்து வந்தனர். கணவர் ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மனைவி சேர்ந்து வாழததால் வேறு ஒரு பெண்ணின் அறிமுகம் ரஞ்சித்குமாருக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்துள்ளது. அந்த பெண்ணுடன் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் ரஞ்சித்குமார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி ரஞ்சித்குமாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

இதற்காக ஆண் நண்பர்களுடன் சென்ற சுபா ரஞ்சித்குமாரை அவர்கள் உதவியுடன் சரமாரியாக வெட்டியுள்ளார். தன்னுடைய ஆத்திரத்தை தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ள அவரது பிறப்புறுப்பை அறுத்து எரிந்துள்ளார் சுபா. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்தார் ரஞ்சித்குமார். இதையடுத்து உறவினர்களால் மீட்கப்பட்ட ரஞ்சித்குமார் ரத்தம் அதிக அளவில் வெளியேறி விட்ட காரணத்தினால் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சுபா மற்றும் அவரது ஆண் நண்பர்களை தேடிவருகின்றனர்.

குடும்ப பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் போலீசார், நீதிமன்றத்தை நாடி இருந்தால் இப்படி ஒரு கொலைப்பழியுடன் சிறைக்கு செல்ல வேண்டிய சுபாவுக்கு ஏற்பட்டிருக்காது. பிரச்சனைகள் வரும்போது ஆண் நண்பர்கள் உதவி செய்வது இயல்புதான். ஆனால் கணவரை கொலை செய்யும் அளவுக்கு ஆண் நண்பர்கள் உதவ வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? சில நேரங்களில் சில மனிதர்கள்...