ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! நேரில் பார்த்து மிரண்ட பிள்ளைகள்! அதிர வைக்கும் காரணம்!

திருவள்ளூரில் குடும்பத்தகராறு காரணமாக கணவர் மனைவி இருவரும் ஒரேப் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சேர்ந்த மதன் இவருக்கும் கவுசல்யா என்பவருக்கும் திருமணமாகி 10 வருடங்களான நிலையில் இவர்களுக்கு 9 வயது மகன் மற்றும் 7 வயது மகள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு நீடித்த நிலையில் நேற்று மாலை கவுசல்யா வீட்டின் சீலிங்ப் பேனில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள அதனை பார்த்து மனம் நொந்த கணவரும் அதே புடவையில் மற்றொரு முனையில் தூக்கிட்டு தொங்கினார்.

மாலையில் பள்ளி முடிந்து வீடுத்திரும்பிய போது தான் இருவரும் பிணமாக தொங்கியதைக்கண்டு அக்கம் பக்கத்து வீட்டினர் தகவலை அடித்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எதிர்ப்பாராத விதமாக பெற்றோர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு குழந்தைகள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.