குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

குழந்தைகளின் பரீட்சை பயத்தைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்ய என்னவெல்லாம் ஈஸியா வீட்டிலேயே செய்து கொடுக்க முடியும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.


ஞாபக மறதிக்கு மிக முக்கியக் காரணம் மூளை நரம்புகளின் முதிர்ச்சியினாலும் மன அழுத்ததம் அதிகமாவதாலும் மூளை சோர்வடைகிறது. அதனால் மூளை எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது.

குழந்தைகள் நன்றாகப் படிக்கவும் அவர்களுக்கு மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளைத் தருவது மிக அவசியம். பொதுவாக உணவு என்பது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவது அல்ல, அது மூளையையும் புத்துணர்ச்சியோடு அறிவாற்றலை அதிகரிக்கச் செய்வதற்கும் உணவு முக்கியப் பங்காற்றுகிறது.

குழந்தைகளுக்கு கண்ட உணவுகளையும் கொடுப்பதை விடவும் பழங்கள் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பொதுவாக குழந்தைகள் பழங்கள் சாப்பிட மாட்டார்கள் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு எப்போதும் ஜூஸ் போட்டுக் கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கு பழங்களை அப்படியே சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன்பாகவோ பின்பாகவோ இரண்டு மணி நேர இடைவேளைகளில் குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிடக் கொடுக்கக் கொடுங்கள்.