நரம்பு தளர்ச்சி பிரச்சனையா? இதோ பழைய பாட்டி வைத்தியம்!

அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம்.


அமுக்கிரா கிழங்கை எடுத்து பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும்.

கிழங்கை பாலில் வேக வைத்து உலர்த்தி பின் பொடி செய்து, இரவு வேளை உணவுக்குப்பின் 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும்.

அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து காலையும் இரவு உணவுக்குபின் பசுவின்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.