இளைஞர் வயிற்றில் 2 ஷ்பூன்! 2 ஸ்க்ரூ ட்ரைவர்! 2 டூத் பிரஷ்! 1 கத்தி! அதிர்ந்த டாக்டர்கள்!

இமாசலப்பிரதேசம் மாண்டி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் வயிற்றுக்குள் 8ஸ்பூன், 1 கத்தி, 2 ஸ்குரூ டிரைவர், மற்றும் 2 டூத் பிரஷ் என அணைத்தையும் நீண்ட நேர அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர்.


இமாசலப்பிரதேசத்தின் மாண்டி பகுதியில் வசிக்கும் கரண் சென் என்பவர் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அரசு மருத்துவமனையில் கடுமையான வயிற்று வலி காரணமாக அட்மிட் ஆகியுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் எவ்வாறு இந்த வயிற்று வலி ஏற்பட்டது எனக் கேட்டபோது அவர் ஏதும் கூறவில்லை இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.கடுமையான வயிற்று வலியால் அந்த நபர் தொடர்ந்து துடிக்கவே, மருத்துவர்கள் உடனடியாக அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். ஸ்கேனிங் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஏனென்றால், அந்த நோயாளியின் வயிற்றில் இருந்தது 8 ஸ்பூன், 2 ஸ்குரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி.இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்டதற்கு , அவர் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு மருத்துவ குழு ஏற்பாடு செய்தது. இதையடுத்து தொடர்ந்து 4 மணிநேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்கு  பின்னர் அவர்கள் வயிற்றில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து உள்ளனர். இதையடுத்து அவர் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் நிகில் கூறுகையில், ‘வயிற்றுக்குள் இந்த பொருட்கள் கண்டதும் எங்கள் மருத்துவக்குழு உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். பொதுவாக மனிதர்கள் ஸ்பூன், கத்தி போன்றவற்றை விழுங்க மாட்டார்கள். நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இப்படி செய்துவிட்டார் என மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் உயிருக்கு பாதுகாப்பான நிலையில் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். என அவர் தெரிவித்துள்ளார்.